45
புறப்பட்டுப் போய் மாணிக்கத்தின் தாயாரை ஆஸ்பத்திரியிலே கொண்டுபோய் `பெட்’ல சேர்த்திட்டாரு. நான் மாணிக்கத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லிட்டு இப்பத்தான் வர்றேன். மாணிக்கம் பாவம்’டா”.
“அது சரி’டா. போட்டிக்குக் கட்டுரை கொடுக்க இன்னும் ரெண்டு நாள்தானே இருக்கு கட்டுரை எழுதியாச்சா?
அருளின் கேள்விக்கு இனியன் பதில் சொல்வதற்குள் அங்கு வந்து சேர்ந்தான் மணி. அருளின் கேள்விக்கு மணி பதில் கூற முனைந் தான்.
“அவனுக்கென்னடா அருள், ச்சூ! மந்திரக் காளி’ன்னு மந்திரவாதி மாங்காயை வரவழைக்கிற மாதிரி,எழுத உட்கார்ந்தா போதும்,கட்டுரையும் முடிஞ்சிடும்; பரிசும் வந்திடும். உ.ம்...”
எனக் கூறிய கையோடு பெரிதாக ஒரு பெருமூச்சுவிட்டான். தொடர்ந்து “நம்மைச் சொல்.” என்று அருளைப் பார்த்து வினா எழுப்பி தன் இயலாமையை வெளிப்படுத்தினான்.
மணி பேசிய தோரணை இனியனுக்கு மனக் கூச்சத்தைக் கொடுத்தது. நேருக்கு நேராக