பக்கம்:திருப்புமுனை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56


10

அன்றுதான் போட்டிக் கட்டுரைகளை ஆசிரியரிடம் சேர்ப்பிக்கும் கடைசி நாள். இனியனைத் தவிர பெயர் கொடுத்திருந்தவர்கள் எல் லோரும் கட்டுரையைக் கொண்டுவந்து கொடுத்து விட்டார்கள்.

எப்பவுமே எல்லோருக்கும் முன்னதாகப் போட்டிக் கட்டுரைக் கொடுப்பவனாயிற்றே இனியன்? இன்று ஏன் இன்னும் கொண்டுவந்து கொடுக்கவில்லை. ஆசிரியருக்கு இது வியப்பாக இருந்தது. எப்படியும் கட்டுரையோடு வந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்.

அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. தளர்ந்த நடையோடும் சோர்ந்த மனதோடும் இனியன் ஆசிரியரிடம் வந்தான்.

“இனியன்! கட்டுரைப் போட்டிக்குப் பெயர் கொடுத்திருந்தாயே. இன்னிக்குத்தானே கடைசி நாள். ஏன் இன்னும் கட்டுரை கொடுக்கலே? போட்டியிலே கலந்துக்கப் போறதில்லையா? கண்ணாயிரம்கூட போட்டிக்குக் கட்டுரை கொடுத்திட்டானே.” படபடவென கேள்விமேல் கேள்வியாகத் தொடுத்தார் ஆசிரியர்.

“போட்டிக் கட்டுரை எழுதி, திருத்தப்படியும் எடுத்து வச்சிருந்தேன் சார், ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/58&oldid=489808" இலிருந்து மீள்விக்கப்பட்டது