இன்றைய சிறுவர்கள் நாளைய நற்குடிமக்கள்: எதிர் காலத்தில் அவர்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டுமெனில் அவர்கள் இளம் வயது முதலே சிந்தனையிலும் செயலிலும் சிறந்தவர்களாக விளங்குவதற்கேற்ற பயிற்சி பெறுதல் அவசியம். அத்தகைய பயிற்சிக் களமாக அமைந்திருப்பதே பள்ளி வாழ்க்கை.
இனியனின் இனிய இயல்புகள் வழி தவறிய கண்ணாயிரம் போன்றவர்களைத் தடுத்து, நேர் வழிக்கு கொண்டு வரத் துணையாயமைகின்றன. அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய கதையே அவர்கட்கு வாழ வழிகாட்டுகிறது.
பத்தாண்டுகட்கு முன்பு அனைத்திந்திந்திய வானொலி சிறுவர் நாடக விழாவில் ‘எது அறிவு?’ என்ற பெயரில் ஒலிபரப்பப்பட்டு பல்லாயிரவர் பாராட்டைப் பெற்ற நாடகமே இன்று புதின உருவில் ‘திருப்புமுனை’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இதுவும் மாணவ, ஆசிரிய சமுதாயத்தின் பேராதரவைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அன்பன்
மணவை முஸ்தபா
நூலாசிரியர்