இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58
தலையைச் சொரிந்தபடியே, எப்படியோ போட்டில் கலந்து கொண்டோமே என்ற திருப்தியுடன் இனியன் வெளியே வந்தான்.
தானும் போட்டியில் கலந்து கொண்டதை நினைக்க நினைக்க கண்ணாயிரத்துக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இலை. பெருமை யும் பூரிப்பும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. போட்டி முடிவைத் தெரிந்துகொள்ள துடிக்கலானான்.
“ஏன்'டா, மணி! எப்படா கட்டுரைப் போட்டி முடிவு தெரிவிப்பாங்க, முடிவு தெரிய ஒரே ஆவலா இருக்குடா.”
கண்ணாயிரம் துடிப்பதைப் பார்த்த மணிக்கு வியப்பாக இருந்தது. ஆச்சரியத்துடன் அவனை நோக்கினான்.
“நீ ஏன்’டா இப்படி துடிக்கிறே! என்னமோ முதற் பரிசு வாங்கப் போறவனாட்டம்.”
மணியின் எகத்தாளமான பேச்சு கண்ணா யிரத்தைச் சீண்டுவது போலிருந்தது.
“வாங்கப் போறவனாட்டம் என்னடா? வாங்கத் தான்'டா போறேன்! வருஷம் தவறாமப்