இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காலம் கடந்துகொண்டே இருந்தது.
நேரம் செல்லச் செல்ல அருள் பொறுமை இழந்தான். இனியன் வரும் வழியை நூற்றி யொராவது முறையாக ஏறிட்டு நோக்கினான். யார் யாரோ வந்து போய்க்கொண்டிருந்தார்களே தவிர எதிர்பார்த்த இனியன் வருவதாகத் தெரியவில்லை. சலிப்போடு தன்னிடம் இருந்த இனியனின் புத்தகப் பையை அப்படியும் இப்படியுமாக நகர்த்தினான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனம் அன்று மாலை வகுப்பில் நடந்த சம்பவத்தை அசைபோடத் தொடங்கியது. அக்காட்சி அவன் மனத்திரையில் படமாகத் தோன்றி மறைந்து கொண்டிருந்தது.