1 10 திருமந்திரம்
சார்வருந் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும் கார்வரை யடவிசேர்ந்துங் காணுதற்கரியார் தம்மை ஆர்வமுன் பொங்க ஆரா அன்பினிற் கண்டுகொண்டே நேர்பெற நோக்கிநின்ருர் நீளிருள் நீங்க நின்ருர்’
'முன்பு திருக்காளத்தி முதல்வனர் அருள்நோக்கால்
இன்புறு வேதகத்திரும்பு பொன்னணுற்போல் யாக் கைத்
தன்பரிசும் வினையிரண்டுஞ் சாருமல மூன்று மற
அன்புபிழம் பாய்த்திரிவார், அவர்கருத்தின் அளவினரோ? எனவரும் சேக்கிழார் வாய்மொழிகள் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரது இயல்பினே உள்ளவாறுணர்த்துதல் காணலாம்.
ஈசனுக் கன்பில்லா ரடியவர்க் கன்பில்லார்
எவ்வுயிர்க்கு மன்பில்லார் தமக்கு மன் பில்லார் பேசுவதென் அறிவிலாப் பிணங்களை நாமிணங்கிற்
பிறப்பினினும் இறப்பினினும் பிணங்கிடுவர் விடுநீ? எனவரும் அருணந்தி சிவர்ை வாய்மொழியும் இங்கு நோக்கத் தகுவதாகும் .
68. என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி யகங் குழைவார்க் கன்றி என் பொன் மணியினே எய்த
வொண்ணுதே. (272)
அன்பிலைன்றி இறைவனே யடையமுடியாதென்கின்றது.
(இ-ள்) எலும்பினையே விறகாகக் கொண்டு பொன் போன்று ஒளியுடையதாய்த் திகழும் (நெருப்பின மூட்டி அத்) தீயின்கண் தன்னுடம்பின் தசையை அறுத்து இட்டு (அதனைப் பொன்னிற முடையதாய்ப்) பொரியும்படி வறுத்