பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 திருமந்திரம்

(இ- ள்) நெற்றிக்கு நேரே இருபுருவங்களின் இடை வெளியாகிய ஆகாயத்திலே தியான நிலையில் அழுந்திக் கூர்ந்து நோக்குதலால் ஒளியுருவாய்த் திகழும் மந்திரப் பொருளாய் உயிர்கள் பற்றிற்கும் பற்றுதற்குரிய சார்பாய்ப் பரம்பொருளாகிய இறைவன் இருக்குமிடம் சிதாகாசமாகிய திருச்சிற்றம்பலமே என்னும் மெய்ம்மையினே அநுபவத்தால் தேர்ந்து அறிந்துகொண்டேன் எ-று.

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி என்றது, ஆருதாரங்களுள் ஆக்குை எனப்படும் இடத்தின. உற் முற்றுப் பார்த்தல் - ஒருவழிப்படவிருந்து கூர்ந்து நோக்கு தல். அங்ங்னம் தியானிக்கும் நிலையில் நாதாந்தத்தின் அஞ்செழுத்து மந்திரவுருவில் நின்று ஒளியுருவில் ஆடல் புரியும் இறைவனது திருக்கூத்துப் புலனும் என் பார், "உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் என்ருர், உயிர்கள் பற்றிய எல்லாப் பொருட்கும் பற்றுக்கோடு இறைவனே என்பார் பற்றுக்குப் பற்ருய் என்ருர் . 'பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்ருய பெருமானே மற்று.ஆரை யுடையேன்” என்ருர் நம்பியாரூரரும். இத்தகைய அற்புதக் கூத்து நிகழ்தற்கு நிலக்களமாகத் திகழ்வது உயிர்களின் உள்ளமாகிய இதயத்திலே நுண்ணிய பரவெளியாகிய ஞானகாயமே என்பார், பரமன் இருந்திடம் சிற்றம்பலமென்று தேர்ந்து கொண்டேனே' என்ருர், ஆன்மாவின் இடமாக ஐந் தெழுத்தே திருமேனியாக நாத முடிவிலே இறைவன் நிகழ்த்தும் இவ்வற்புதத் திருக்கூத்தினை நல்ல தவமுடைய குருவின் அருளால் காணுதல் வேண்டும் என்பதனை,

'நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத் தஞ்செழுத்தால்

உற்றுருவாய் நின்ருடல் உள்ளபடி - பெற்றிடநான்

விண்ணுர் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே

தண்ணுர் அருளாலே சாற்று? (30) என விளுவாகவும்,