பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

335


அயரா அன்பின் அரன் கழ லணந்தோராகிய சீவன் முத்தர் களது இயல்பினே விளக்குகின்றது.

(இ-ள்) எப்பொருட்கும் செழுமை நல்கும் சார்பாந் தன்மையுடைய சிவபெருமானை அவனருளாற் கண்டுணரப் பெற்றேன். ஆதலால் பிறவிப் பிணியினை விட்டொழிந் தேன். உலக வுறவாகிய பாசப் பிணிப்பினை விட்டு விலகி னேன். (எனது பசு போதங் கழன்றமையால்) இறைவ னும் யானும் எனப் பிரித்துணராதவாறு இறைவனேடு பிரிவறக் கலந்து ஒன்ருனேன். ஆதலால் அங்கு அழியுந் தன்மையவாய் வரும் எத்தகைய செல்வங்களேயும் இனி வேண்டும் குறையுடையே னல்லேன். எ-று.

செழுஞ் சார்புடைய சிவனைக் கண்டேன் (ஆதலாலே) பிறவி ஒழிந்தேன்; உறவு என்னும் பாசம் கழிந்தேன்; கடவுளும் நானும் ஒன்று ஆனேன்; ஆங்கு அழிந்து வரும் ஆக்கமும் இனிவேண்டேன் என இயையும். எல்லாப் பொருட்கும் பற்றுக்கோடாகிய இறைவனது சார்பு உலகத்துப் பிறசார்பு போலன்றி எக்காலத்தும் ஊக்கமும் ஆக்கமும் நல்கும் செழுமை வாய்ந்தது என்பார், செழுஞ் சார்புடைய சிவன்? என்ருர். நான் என்றது உடம்புடன் இருக்கும் பொழுதே அரன்கழல் அணையும் பேறுபெற்ற ஆன்மாவை கடவுளும் ஆன்மாவும் ஒன்ருதலாவது, உப்பானது தனது கடினத் தன்மை நீங்கி நீரோடு ஒன்ருய்க் கலத்தல் ப்ோல, உயிர் தனது சகசமலம் கெட்டீெர்ழியக் கடவுளோடு இரண்டறக் கலந்து ஒன்ருதல். ஆங்கு என்றது, சீவன் முத்தர்க்கு அயலதாய் வேறுபட்ட உலகின. அயரா அன்பின் அரன் கழல்ணேந்த திருமூல தேவ நாயனர் தமது அனுபவத்தில் வைத்து அணந் தோர் தன்மையினை விளக்குவதாக அமைந்தது. இத் திரு மந்திரமாகும். x