அருள்முறைத் திரட்டு
337
துள்ளே எண்ணுதலால் சிவானந்தத்தினை எய்தி இன்புறுந் திறத்தினை 'நமச்சிவாயப்பழம் தின்று கண்டேற்கு இது தித்தவாறே எனத் திருமூலர் தமது சிவாநுபவத்தில் வைத்து விளக்கியருளினர். திருவைந் தெழுத்தினேவிதிப் படி எண்ணிப் போற்றுதலாலுளவாம் சிவானந்தத்தை,
‘ஆலைப்படு கரும்பின் சாறுபோல
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான் ? எனவும்,
'எண்ணித் தம்மை நினைந் திருந்தேனுக்கு
அண்ணித் திட்டமு துரறு மென் நாவுக்கே: (5-11-2) எனவும்,
'மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
கணிதந்தாற் கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி
இனிது சாலவும் ஏசற்றவர் கட்கே? (5-91-7) எனவும் வரும் திருநாவுக்கரசர் அருளிச்செயலால் நன்கு ணரலாம்.
234. அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன் என் பொன் மணியை இறைவனே ஈசனைத் தின்பன் கடிப்பன் திருத்துவன்
தானே. (2980) சீவன் முத்த ராயினர்க்கு இறைவன்பாலுள்ள அயரா அன்பினை விளக்குகின்றது.
(இ-ள் ) அன்பினல் உள்ளம் உருகி அவனே நினைந்து அழுவேன். அரற்றுவேன். வலிய எலும்பும் உருகுமாறு இரவும் பகலும் அம் முதல்வனே ஏத்திப் போற்றுவேன்.