பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

திருமந்திரம்


சிறப்பு-அன்பின்மிகுதி, வானவரும் இறைவனை யணுகி மறவாது நினைந்து போற்றுதற்கும் ஓதித் துதித்தற்குஞ் சாதனமாவது மந்திரமாலை யாகிய இத்திருமுறை. எனவே மண்ணுலகத்தார் இறைவனை மறவாது போற்றுதற்குச் சிறந்த சாதனமாவதும் இத் திருமந்திரமாலையே என்பது தானே புலனாம். இத்திருப்பாடலால் திருமந்திர மாலை யென்னும் நூற்பெயரும் அதனை ஓதுதலால் வரும் பயனும் ஒருங்கு உணர்த்தியவாறு காண்க.