அழ. வள்ளியப்பா
❖ 27
யாகத் தேர்ந்தெடுத்தீங்க? இப்போ என்னைச் சும்மா விட்டிடுங்கோ. எனக்கு மந்திரி பதவியும் வேண்டாம்; மண்ணாங்கட்டியும் வேண்டாம்” என்று அழாக் குறையாகக் கெஞ்சினார் அந்த மனிதர்.
அப்புறம்...?
அவர் ஓடிப் போய்விட்டார். முன்கோபி ராஜாவுக்குப் புத்தி வந்தது. பழைய மந்திரி அறிவொளியை அழைத்து வரச் சொல்லி அவரையே மீண்டும் மந்திரியாக்கிவிட்டார்.
அப்பொழுது மந்திரி அறிவொளி சொன்னார்:
“அரசே, கோபம் குடியைக் கெடுக்கும் என்பார்கள். சாதாரண ஒரு மனிதனுடைய கோபம் அவனுடைய மனைவி, மக்கள், அக்கம் பக்கத்திலுள்ள வர்களைத் தான் கெடுக்கும். ஆனால், தாங்களோ ஒரு ராஜா. இந்த ராஜ்யத்திலுள்ள எல்லாக் குடி மக்களும் உங்கள் குடும்பம் போல். ஆகையால், கோபம் கூடாது” என்றார்.
“மந்திரி, இனி உம்முடைய யோசனையைக் கேட்டுத்தான் எதுவும் செய்வேன்” என்று கூறி மந்திரியைக் கட்டிப்பிடித்து, அவர் முதுகிலே தட்டிக் கொடுத்தார். அன்று முதல் அவருடைய முன் கோபமும் மெல்ல மெல்லப்பறக்கத் தொடங்கியது!