பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60 ❖

திரும்பி வந்த மான் குட்டி



அது பாய்ந்த வேகத்தில் அதனுடைய கூர்மையான அலகு குப்புவின் மொட்டைத் தலையைப் பதம் பார்த்துவிட்டது!

அதிர்ச்சிக்கு உள்ளான குப்பு தலையைத் தடவிப் பார்த்தான். கையெல்லாம் இரத்தம்!“ஐயோ!”, “அம்மா” என்று அலறியபடி அங்கேயே தரையில் உட்கார்ந்து விட்டான்!

சத்தத்தைக் கேட்டு அந்தப் பக்கமாக வந்தவர், போனவரெல்லாம் ஓடிவந்து பார்த்தார்கள். ஒலைக் குல்லாவைக் காணோம்! தரையிலே கற்கண்டுக் கட்டிகள், வெல்ல அச்சுகள், முந்திரிப் பருப்புகள் எல்லாம் விழுந்து கிடந்தன. இக்காட்சியைக் கண்ட பலசரக்குக் கடை பழனிச்சாமியின் நண்பர் ஒருவர் உடனே பழனிச் சாமிக்குத் தகவல் சொல்லி அனுப்பினார். ஒடோடி வந்த பழனிச்சாமி,“எப்படிடா இது நடந்தது?” என்று கேட்டார்.

மகன் நடந்ததையெல்லாம் சொல்லி, “அப்பா, உங்களுக்குத் தெரியாமலே தினசரி இப்படிப் பண்டங்களைக் கொண்டு போனேனப்பா. அது தப்புத் தானப்பா. இப்போ நல்லா உணருகிறேன் அப்பா. இனிமேல் இதுமாதிரி செய்ய மாட்டேனப்பா” என்று மன்னிப்புக் கேட்டான்.