இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அழ. வள்ளியப்பா
❖ 67
“ஆமா, நீ சொல்றது சரிதான். கூடி இருந்தால், கோடி நன்மை என்பாங்க. மரங்களெல்லாம் சேர்ந்திருந்த காரணத்தினாலே, புயலாலே ஒண்னும் செய்ய முடியல்லே. அன்னிக்கு நீ சொன்னதைக் கேட்டு, அதன்படி நடந்திருந்தால், என் குழந்தை களை நான் பறி கொடுத்திருப்பேனா? இன்னிக்கு ராத்திரியே நான் உன்னோடே காட்டுக்கு வந்துடுறேன். உன்னோடே அந்த மரத்திலே நானும் முன் போலக் கூடு கட்டி வசிக்க முடிவு பண்ணிட்டேன்.”
“சரி, அப்படியே செய்யலாம்.”
அன்று பொழுது சாயும் நேரத்தில் இரண்டு காக்கைகளும் ஒன்றாகச் சேர்ந்து காட்டை நோக்கிப் பறந்து சென்றன.