பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74 ❖

திரும்பி வந்த மான் குட்டி



ரங்கன் சுவரிலிருந்து ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது. தேங்காய்க் கீற்றை எட்டி எடுக்கப் போனது. மறுவிநாடிடங்கென்றுதலையில் பலமாக ஓர் அடி விழுந்தது! அந்தப் பொல்லாத கிழவிதான் காக்கை விரட்டுவதற்காகப் பக்கத்திலே வைத்திருந்த தடியாலே ஓங்கி அடித்து விட்டாள். வலி தாங்காமல், கத்திக்கொண்டே ரங்கன் வெறுங்கையோடு ஓடி மீண்டும் சுவரிலே ஏறிக் கொண்டது. அன்றைக்கும் பட்டினிதான்!

மூன்றாம் நாள் கோயில் பக்கமாகப் போய், மதில் சுவரிலே உட்கார்ந்து கூர்ந்து, கூர்ந்து பார்த்தது. கொஞ்சதுரத்திலே ஒரு பழக்கடை தெரிந்தது. அங்கே ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் எல்லாம் இருந்தன. சிப்புச் சீப்பாய் வாழைப்பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கடைக்காரர் அசந்த சமயம் பார்த்து ஒரு சீப்பு வாழைப்பழத்தைக் கொண்டு வந்து விடலாமென்று நினைத்தது ரங்கன்.

கடைக்காரர் பின்புறமாகத் திரும்பி, கூடையிலிருந்த பழங்களை எண்ணிக் கொண்டிருந்தார். அப்பொழுது பார்த்து ரங்கன் ஒரே தாவாகத் தாவிப் பழக்கடைக்குள் புகுந்தது. ஒரு சிப்பு வாழைப்பழத்தைப் பிடித்து இழுத்தது.