பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்க ஒளிசிறந்த திருவிளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்க அருள் உதவு பெருந்தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த் துறைத் தலைவராய் விளங்கிய பன்மொழிப் புலவர் டாக்டர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்களுடன் சித்தாந்த கலாநிதி உரை வேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்களும், யானும் 1944-45 ஆம் ஆண்டில் வடலூரில் நிகழ்ந்த சன்மார்க்க சங்கக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். அக்கூட்டத்திற்குத் தமிழ்த்தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அப்போது 'தேவாரத் திருமுறையும் திருவருட்பாவும்' என்ற பொருள் பற்றிப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 15 மணித்துளியில் யான்