பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


சமுசாரிகள் தாய் பிதா, மக்கள் துணைவர் முதலிய குடும்பத்தாரைப் பசியினாற் பரிதபிக்க விட்டு விட்டு அயலார்க்குப் பசியாற்றத் தொடங்குதலும், தம்மிடத்துப் பசித்து வந்த அயலாரை அந்தப் பசியால் பரிதபிக்க விட்டுத் தம் குடும்பத்தார் பசியையாற்றத் தொடங்குதலும் கடவுளருளுக்குச் சம்மதமல்ல. ஆதலால் தமது குடும்பச் செலவைக் கூடிய மட்டில் சிக்கனஞ் செய்து இருதிறத்தார் பசியும் நீக்குதல் வேண்டுமென்றும், அற்ப சத்தியினுங் குறைபட்டுத் தமது குடும்ப மட்டிலும் பசியகற்றுவிப்பதற்குப் பிரயாசையால் மிகச் சிறிய முயற்சியுடைய சமுசாரிகள் தமது குடும்ப மட்டிலாவது பசியாற்றுவித்துக் கொண்டு தம்மிடத்துப் பசித்து வந்த அயலார் விஷயத்தில் மிகவும் தயவுடையவர்களாகி அவர் பசியை மற்றொருவரைக் கொண்டாவது ஆற்றுவிப்பதற்குத் தக்க முயற்சியெடுத்துக் கொள்ளவேண்டு மென்றும் இயல்புள்ள பிரபல சமுசாரிகள் தங்கள் தங்கள் வருவாய்க்குத் தக்க வகையில் தாய், பிதா, புணர்ந்தோர், மக்கள், துணைவர், உறவினர், சினேகர் அதிதிகள், பெரியர், அடிமைகள், அயலார், பகைவர் முதலியவர்களுக்கும், தமது குடும்பத்திற்குச் சகாயமாகத் தேடிய பசு, எருது, எருமை ஆடு, குதிரை, தாவரம் முதலிய பிராணிகளுக்கும், பசியை ஆற்றுவித்துத் திருப்தி யின்பத்தை உண்டு பண்ண வேண்டுமென்றும், விவாகம் புத்திரப் பேறு தெய்வம் படைத்தல் முதலிய பலவகைச் செய்கைகளில் வேறு வேறு சடங்குகளும் வேறு வேறு வினோதங்களும் வேறு வேறு பெருமைப்பாடுகளும் குறித்துப் பொருட் செலவு செய்தலை அமைத்து, விவாக முதலிய அந்தந்தச் செய்கைகளிலும் பசித்த சீவர் களுக்குப் பசியை ஆற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சிறப்பினையே செய்ய வேண்டும் என்றும் அப்படிச் செய்யின் பசித்தவர் பசிநீங்கி