பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


அடைந்த இன்பத்திலும் அனேக மடங்கு அதிகமான இன்பத்தைத் தாம் அடைவார்களென்றும் சத்தியமாக அறிய வேண்டும். சமுசாரிகள் விவாக முதலிய விசேஷக் காரியங்களில் பந்தலை அலங்கரித்தும், வேறு வேறு சடங்குகளைச் செய்வித்தும், ஆடல், பாடல், வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களையும் அப்பவர்க்கம், சித்திரான்னம் முதலிய பெருமைப்பாடுகளையும் நடத்தியும் எக்களிப்பில் அழுந்தியிருக்குந் தருணத்தில் பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிப்பதில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும் தமது மக்கள் துணைவர் முதலியோர்களுக்காயினும் ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது. அப்போது அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படுகிறார்கள். இப்படித் துக்கப்படும் போது அலங்காரஞ்செய்த பந்தலும், சங்கல்ய விகல்பமான சடங்குகளும், பாடல் வாத்தியம் வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களும் அப்பவர்க்கம், சித்திரான்னம் முதலிய பெருமைப் பாடுகளும் அந்த ஆபத்தைத் தடை செய்யக் கண்டதில்லை, அந்தச் சுபகாரியத்தில் உள்ள படியே பசித்த சீவர்களுக்கு ஆகாரங்கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள் அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்கத்தையும் கடவுளின்பத்தையும் வெளிப்படச் செய்திருந்தார்களானால் அந்த விளக்கமும் இன்பமும் அத்தருணத்தில் நேரிட்ட ஆபத்தை நீக்கி விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக உண்டுபண்ணுமல்லவா? ஆதலின் விவாக முதலியவிசேஷச் செய்கைகளிலும் தங்கள், தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தி இன்பத்தை உண்டு பண்ணுவது முக்கியம் என்று அறியவேண்டும். சூலை, குன்மம், குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள்