இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
244
குணம் அறியேன் செய்தபெருங் குற்றமெலாம் குணமாகக்
கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
மணமுறு பேர் அருளின்ப அமுதமெனக்களித்து
மணிமுடியுஞ் சூட்டி எனை வாழ்கஎன வாழ்த்தித்
தணவலிலா தென்னுளத்தே தான்கலந்து நானுந்
தானுமொரு வடிவாகித் தழைத் தோங்கப் புரிந்தே
அணவுறுபேர் அருட்சோதி அரசு கொடுத்தருளி
ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்தருளே
(௸ 4188)
எனவரும் திருவருட்பாப் பாடல்களாகும்.