பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

நூல்களையும் பொதுவறிவு நூல்களையும் ஒப்பியல் நூல்களையும் வரிசைநூல்களையும் காஞ்சி வனப்போடு பதிப்பித்து வருகின்றது. கல்லார்க்கும் கற்றவர்க்கும் தமிழ்க்களிப்பு ஊட்டும் மணிப்பதிப்பகமாக இலங்குகின்றது.

பேராசிரியர் திருமுறைச்சான்றோர் வெள்ளை வாரணனார் பழுத்த பேரானந்தப் பழமாக ஆழ்பெரும் புலமையோடு எழுதிய திருவருட்பாச் சிந்தனை என்ற நூலை மணிவாசகர் நூலகம் வெளியிட்டிருப்பது அதன் பதிப்பு வரலாற்றில் பெருமைதரும் தொண்டாகும். வள்ளற் பெருமான் வாழ்த்தும் கூடவே கிடைக்குமன்றோ.