பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

337


அருணகிரிநாதர், தாயுமானார் முதலிய அருளாளர்கள் பாடிய பாடல்களைச் சேய்மையில் இருந்து கேட்போர் இப்பாடல் இன்னார் பாடியது என இனந்தெரிந்து கொள்ளுமாறு போலவே, இராமலிங்க வள்ளலார் பாடிய பாடல்களைக் கேட்போர் இப்பாடல் திருவருட் பாவைச் சேர்ந்தது என இனம்புரிந்து கொள்ளும்படி தமக்கென ஒருமொழி நடையை உருவாக்கிக் கொண்ட சிறப்பு வள்ளலார்க்கு உரியதாகும்.