இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
382
அரசியல் ஆட்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பினைப் பெறுதல் வேண்டு மென்பதே வடலூர் வள்ளலாரின் உயர்ந்த குறிக்கோளாகும்.
மக்களாட்சியின் அமைப்பினைப் பற்றிய இவ்வுயர்ந்த கருத்து,
'ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுளராகி உலகியல் நடத்தல் வேண்டும்'
(4082)
என இராமலிங்கவள்ளலார் இறைவனை நோக்கி வேண்டிய சுத்த சன்மார்க்க வேண்டுகோளில் இடம் பெற்றிருத்தல் உணர்ந்து மகிழத்தகுவதாகும்.