பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


வழிபாடு, செவ்வேள் வழிபாடு என்னும் இவ்வழிபாடுகளும் இவற்றின் வேறாகச் சமணமும் புத்தமும் வேதநெறி பற்றிய கொள்கைகளும் தத்துவ அளவில் தனித்தனிச் சமயங்களாக வேறுபடுத்துப் பேசப்படுகின்றன. சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, கொற்றவை வழிபாடு, செவ்வேள் வழிபாடு என்னும் நான்கும் தம்முள் உறவு முறைத் தொடர்புடையனவாகவும், இவற்றுட் சிவவழிபாடொன்றுமே தலைமைச் சிறப்புடையதாகவும் திகழ்ந்தமையும், இவையன்றி ஞாயிறு வழிபாடு, திங்கள் வழிபாடு, மழை வழிபாடு, இந்திர விழா, காம வேள் விழா என்பன அக்காலத் தமிழ்மக்களால் கொண்டாடப் பெற்றன என்பதும், தெய்வச் சிறப்புடைய ஊரைப் போற்றுதலும், தீது தீர் வையை கங்கை முதலியவற்றில் ஆருட்டும், குமரி முதலிய கடலாட்டும் ஆகிய வழிபாட்டுச் சடங்குகளும் அக்கால மக்களால் மேற்கொள்ளப் பெற்றன என்பதும் சங்கத் தொகை நூல்களாலும் சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் இவ்விரு காப்பியங் களாலும் நன்கு புலனாகின்றன.

வடநாட்டில் வைதிக நெறிக்கு எதிராகத்தோன்றிய சமண புத்த சமயங்கள் தத்தம் கொள்கைகளைப்பரப்பும் நோக்குடன் தமிழகத்தில் சங்க காலத்தில் வேரூன்றின. அவை வேரூன்றிய பின்னர்த் தத்தம் சமயக் கொள்கையைப் பரப்பும் அளவில் அமைந்துவிடாது இங்குள்ள தெய்வக் கொள்கையினையும் புறம் பழிக்கத் தொடங் கின என்பது சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையோன் கூற்றைப் புறக்கணித்துப் பேசிய கவுந்தியடிகள் கூற்றால் உய்த்துணரப்படும். சிலப்பதிகாரத்தையடுத்து மணிமேகலைக் காப்பியம் இயற்றப் பெற்ற காலத்தில் தமிழகத்திற் பல்வேறு சமய வாதிகளும் மக்கள் பேரவையிலே தத்தம் சமயவுண்மைகளைக் குறித்து உறழ்ந்து