vii
இறைவி, திருமால், இலக்குமி, சரசுவதி முதலியோரால் வணங்கப்படுவள் என்பது, இந் நூலிலுள்ள 5, 8, 42, 44 எண்ணுள்ள பாடல்களால் தெரியவருகிறது.
இறைவனும் ஊடல் காலத்தில் இறைவியை வணங்கி ஞன் என்பதை 48வது பாடலில் நம் ஐயா குறிப்பிடுகின் ருர்.
இலக்கியங்களில் நகைச்சுவை அ ைமயப் பாடுவது புலவர்களின் மரபு. இந்த மரபு தோத்திர நூல்களிலும் காணப்படுகின்றது. இந்த மரபுக்கு ஏற்ப வள்ளலார் நகைச் சுவை அமைத்துப் பாடியுள்ள பாடல்களே இந் நூலின் 131 ! 5, 20, 21, 22, 23, 24, 25, 49 எண்களில் காணலாம்.
இறைவியின் கற்பின் மேம்பாடும், வாழ்வரசியாக வயங்கும் சிறப்பும் 14, 30 பாடல்களில் துலங்குகின்றன.
55வது பாட்டில் ஒரு நல்ல பழமொழி பொருந்தியுளது. உருவக அணிக்கு உதாரணமாக 9 வது, 96 வது பாடல்களே எடுத்துக் காட்டலாம்.
திருமால், அலைமகள், கலைமகள் பற்றிய அரிய குறிப்பு களே 6, 8, 1, 12, 16, 17, 18, 19, 44 எண்ணுள்ள பாக்களில் இந்நூல் எடுத்து இயம்புகிறது.
இறைவியின் உண்மை நிலைகளை 28, 33, 50, 5 , 14
எண் ணுள்ள செய்யுட்களில் நம் ஐயா குறித்துள்ளனர்.
இறைவியைப் புகழ்பவர் அடையும் பேற்றையும், புகழா தவர் உறும் சிறுமையையும் 37, 43, 90 எண்ணுள்ள பாடல்களில் உய்த்து உணர்ந்து கொள்க.
இறைவியிடம் நம் ஐயா வேண்டுகோள் முறையில் இந் நூலில் பாடியுள்ள பாடல்களே 27, 32, 46, 61, 64, 65,