38 திருவருட்பா
‘ கத்தும் தரங்கம் எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளேந்து வலம் புரிகள் கரையில் தவழ்ந்து வாலுகத்தில்
கான்ற மணிக்கு விலைஉண்டு தத்தும் கரட விகடதட
தந்திப் பிறைக்கூன் மருப்பில் விளே தரளம் தனக்கு விலை உண்டு
தழைத்துக் கழுத்து வளைந்தமணிக் கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர் முத் தினுக்கு விலஉண்டு கொண்டல் தரும்நித் திலம்தனக்குக் கூறும் தரம் உண் டுன்கணிவாய் முத்தம் தனக்கு விலை இல்லை
முருகன் முத்தம் தருகவே முத்தம் சொரியும் கடல் அலைவாய் முதல்வா முத்தம் தருகவே ‘’
- வளைக்கும் தமரக் கருங்கடலின்
வளைவாய் உகுத்த மணிமுத்துன் வடிவேல் கறைபட் டுடல்கறுத்து மாசு படைத்த மணிமுத்தம் துளைக்கும் கழையில் பகுமுத்தம்
துளயத் தொடைமால் இதழ்பருகித் துாற்றும் திவலை தெறித்தமுத்தம்
சுரக்கும் புயலில் சொரிமுத்தம் திளைக்கும் கவன மயில் சிறையில்
சிறுதுாள் பொதிந்த குறுமுத்தம் செந்நெல் முத்தம் கடைசியர்கால்
தேய்த்த முத்தம் செழுந்தண்தேன்