பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருவருட் சிந்தனை

தோல்வியும் வெற்றியே என்றுணர்த்திய கருணையே!

இறைவா, என்னுடைய சேம நிதியே! நின்னருள் பேர்ற்றி! போற்றி! என் வாழ்க்கையில் வெற்றிகள் தேவை. இது என் ஆசை. இறைவா, எனக்கு எடுத்த காரியம் யாவினும் வெற்றியை அருள் செய்க! -

இறைவா, என்ன அருளிச் செய்கின்றனை வெற்றி என்பது ஒன்றும் அவ்வளவு பெருமைக்குரிய தன்று. சில சமயங்களில், பலருக்கு வெற்றி, நல்வாய்ப்பால் கூட வந்து விடலாம். -

என்னை வளர்ப்பது வெற்றிகள் அல்ல. என் தகுதிக்கு அளவுகோல் வெற்றிகள் அல்ல! இல்லையா , இறைவா மனிதனை வளர்ப்பன தோல்விகளே. -

ஒரு வெற்றியை விட ஒரு தோல்வி போற்றத்தக்கது. பெருமைப் படத்தக்கது. வரலாற்றில் நிலைத்து நிற்கக் &.fq tu . - “ . .

உலகியல் தெறிப்படி ஏசுபெருமான் தோற்றார். ஆனால் வாழ்வியல் நெறிப்படி வென்றார். இன்றும் மனித உலகத்தை வென்று வாழ்கின்றார். .

என் வாழ்க்கையில் உயர் குறிக்கோளை எடுத்துக் கொள்வேன். என் வாழ்க்கையைப் போர்க்களமாக்கிக் கொள்வேன். ஓயாது போராடுவேன். .

இந்த நடைப்பயணத்தில் நான் சந்திக்கும் துன்பங் களைக்கண்டு துவண்டு விழுந்துவிடமாட்டேன். சோர்ந்து விட மட்டேன். என் பயணத்தை இடையில் நிறுத்தவும் மாட்டேன். .

தான் தோல்விகளைச் சந்தித்தாலும், அழுது கலங்க மாட்டேன். அத்தோல்விளை, வெற்றிப் பயணத்தின் படிக் கற்களாக்கித் தொடர்ந்து நடப்பேன். இது உறுதி. எனக்குத் தோல்விகளும் வெற்றிகளே என்றுணர்த்திய இறைவா, உன் கருணைக்கு நன்றி. போற்றி! போற்றி!