பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் # , ,

இறைவா அமைதியை அருள் #!

இறைவா, உமது மறு பெயர்கள் . அமைதி: இன்பம் என்பன! ஆனால் இறைவா! உன்னை நான் அமைதி யாகக் கண்டு ஆராதித்தேன் இல்லை. இன்பமாக நினைந்து ஏத்திப் புகழ்ந்தேன் இல்லை. - - --

ஆம், இறைவா! அமைதியின் தரிசனம் கிடைப்ப்தே இல்லை. எங்கு நோக்கினும் பதற்ற நிலை: பழைய காட்டு மிராண்டிகளைப் புோலவே அடுதலும் தொலைதலும் திகழ் கின்றன. இந்த நிலை வீட்டிலிருந்து நாடு வரை உள்ளது:

இறைவா, இந்தக் கலக உலகை, மீட்டு அமைதிக்குக் கொண்டு வர வேண்ட்ாம்ா? ஆம் இறைவா! நிச்சயம் கொண்டுவர வேண்டும்:

ஆழ்ந்த அறிவிலேயே அமைதி தோன்றும் தெளிவான் சிந்தன்ையிலேயே அமைதி தோன்றும். தன்னல மறுப்பி லேயே அமைதி தலுைகாட்டும். பிறற்கென முயலும் பண். பிலேயே அமைதி வந்தமையும். இதுவே நியதி.

அன்பே இன்பம் இன்பமே அன்பு அமைதியே வழி பாடு. இறைவா, அமைதியை அருள் செய்க: உலகில் அமைதி நிலவ அருள் செய்க: :