பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

காரியங்களில் முறைப்பாடுகள் அமைய அருள்க!

இறைவா, குறைவில் நிறைவே! கோதிலா அமுதே! நின்னருள் போற்றி! போற்றி! இறைவா, நின் இயல்பில், நின் தொழிலில் சிறப்பான முறைப்பாடுகள் அமைந் துள்ளன.

இறைவா, நின் அமைதி பொருந்திய முறைப்பாடுகள் வியப்பிற்குரியன! ஆனால், நின் தொழிலில் அமைந்துள்ள முறைப்பாடுகளை அனுபவிக்கும் நான், என் வாழ்க்கையில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்வ தில்லை.

முறைப்பாடுகள் இல்லையானால் முன்னேற்றம் ஏது? இறைவா, நான் செய்ய வேண்டிய பணி எது? அந்தப் பணியின் பல்வேறு கூறுகள் என்ன? அந்தப்பணி நடை பெற வேண்டிய பல்வேறு காலக் கட்டங்கள் என்ன?

பணிகளை தொகுத்தும் வகுத்தும் முறைப்படுத்திக் கொண்டால் நான் ஏர, ளமான பணிகளைச் செய்ய இயலும். காலத்திலும் செய்யக்கூடும். யாதொரு இழப்பும் வராமல் செய்யகூடும். அப்படியா இறைவா?

என் பணிகள் முறைப்படுத்தப் பட்டு விட்டால் பணிகளின் அளவுகூடக் குறையும். என் ஆற்றல் மிஞ்சும்: உழைப்பும், குறையும். அதே போழ்து நிறைவு பலவும் கிடைக்கும். இறைவா, நன்றருளிச் செய்தனை ல்

என் பணிகளில் முறைப் பட்டினை QFirST அருள் செய்க! என் வாழ்க்கையில் ஆமையும் முறைப்பு டுள்ே என் வெற்றியை நி இன்றவர், அருள் செய்க! * * : * ~ *-*... - -

இறைவா, நான் மேற்கொள்ளும் சிறிய ப்ெரிய"காரியங் களில் முறைப்பாடுகள் அமையும்படி அருள் செய்க