பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 திருவருட் சிந்தனை

இறைவா, உன்னை நினைந்து வாழ்வது என் கடன்

இறைவா, நேற்று இரவு உறக்கமே இல்லை. இறைவா! உடலில் குறையில்லை! கன்றை, தாய்ப் பசுவிடமிருந்து பிரித்துக் கட்டி விட்டார்கள். கன்று தாயை நினைந்து கத்தியது. -

இறைவன் , ஆறறிவு இல்லாத உயிரால் தாயின் பிரிவைத் தாங்க இயலவில்லை. ஆதலால் அது கத்துகிறது!

இன்றவா, நீ எனக்குத் தாய் இல்லை, இறைவா! தாயினும் சிறந்த தாய். என் பிறவி கெட நீ உருக்கொண் டாய்

இறைவு நான் ஆணவத்தில் கிடந்த போது-அறி யாமையில் ஆழ்ந்து கிடந்த போது என் இரங்கத் தக்க நிலை யினை எண்ணி உடல் கொடுத்தாய்.

உடலும் உள்ளமும் தந்து பொன்னோடும் பொருளோடும் புணர்த்தினாய் இதற்கு ஏது கைமாறு ஆனால், நின்னைப் பிரிந்து வாழ்கின்றேன்! இல்லை இறைவா, மறந்து வாழ்கின்றேன்! *... .

உன்னை நினைப்பது -உன்னை நினைந்து, நினைத்து உணர்ந்து உணர்ந்து வாழ்வது என் கடன். என் பணி.

இறைவா, என்னை மன்னித்துக் கொள். நினைக் கின்றேன். நினிையாது ஒருபோதும் இருந்தறியேன். இறைவா, மன்னித்து அருள்க! -

இறைவா, உன் னை நினைத்து வாழ்ந்திட அருள் செய்க!