பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 2 திருவருட் சிந்தனை

இறைவா, என் கால்கள் சிறந்திட அருள் செய்க!

இறைவா, நின்னையடைதலே திருவடிப்பேறு என்கின்ற னர்! நின் திருவடிகள்-தாள்கள் தாங்குந் தகையன: இறைவா, எனது காலகளுக்கு வலிமையைக் கொடு. உழைக்கும் பண்பைக் கொடு.

உற்பத்திப் பணிகளை சிறப்புடன் செய்து வழிவழி வரலாற்றுக்குக் கால் கொடுத்து நிறுத்தும் பெற்றிமையை என் கால்களுக்குக் கொடு.

நடை என்றால் காலால் நடப்பது மட்டுமன்று. அது நல்லொழுக்கத்தையும் குறிக்கும். ஆம்! என் கால்களின் வலிமையில் - உழைப்பில்தான் ஒழுக்கம் கால் கொள் கின்றது.

இறைவா, என் கால்கள் எனது நல்லொழுக்கத்திற்குத் துணையாக அமைந்த கால்களாக விளங்க அருள் செய்க!

என் கால்கள் நாடெல்லாம் நடந்து வந்து நல்லன அறிய அருள் செய்க! -

இறைவா, என் கால்கள் வழுக்கல் நிலங்களிலும் இழுக்கலாகா வண்ணம் நடந்திட அருள் செய்க! நின் திருக்கோயிலில் வலம் வரும் வாய்ப்பினை அருள் செய்க! நின் சந்நிதியில் நின்றே தவம் செய்யும் பேற்றினை அருள் செய்க!

இறைவா, என் கால்கள் சுறுசுறுப்பாக இயங்கி, என் வாழ்வை இயக்கமாக்கிட அருள் செய்க! என் கால்கள் சிறந்து, வழி வழிக் கால்களாக விளங்கிட அருள் செய்க!