பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 6 திருவருட் சிந்தனை

  • -*.

மற்றவர் மகிழும் பணிகளில் ஈடுபடும் வரம்தா!

இறைவா, மூலநோய் தீர்க்கும் முதல்வா! அழுக்காறி லிருந்து என்னைக் காப்பாற்று. அழுக்காறு அன்புக்குப் பகை, நட்புக்குப் பகை, ஆக்கத்திற்குப் பகை, இந்த அழுக்காறு ஏன் எனக்கு?

பிற வாழ மகிழும் மனம் கிடைத்தால் போதும்: இறைவா, நீ அன்பின் திருவுரு மனித குலத்தை நேசிக்கும் அன்பினை வழங்கு! பிறர் இன்புறுவதுதான் இன்புறுவது என்று கருதி வாழ்தல் வேண்டும்.

நான் பிறர் தலம் நாடுவதையே உயிர்நோன்பாக ஏற்றுக் கொள்ள அருள் செய்க! நீலமணி மிடற்றிறைவனே! சமூக வாழ்க்கை வாழ்தல் என்ற நிலை அழுக்காறைத் தராது. இன்புற்று வாழும் சிறப்பினை நல்கும்! இறைவா அருள் செய்க! -

சமூக வாழ்க்கையை ஏற்று ஒழுகுதலே அழுக்காறுக்கு மருந்து! அழுக்காறற்ற வாழ்க்கை ஆக்கத்தைச் சேர்க்கும். சுற்றத்தை நல்கும். இந்த உலக வாழ்க்கையில் சொர்க்கத் தைப் படைக்கும்.

இறைவா, பிறரை வாழவைக்க அறிவறிந்த ஆள்வினை யைத் தா! அனைத்துலகமும் எனது உலகம் என்று அணைத்துச் செல்லும் அறப் பண்பினைத் தந்தருள் செய்க:

அழுக்காது அற்ற நெறி நயந்த அருள் வாழ்வை அருள் ! பிறர் மகிழ்வுறும் செயல்களில் ஈடுபட்டு, உளமாரச் செய்யும் வரத்தினைத் தத்தருள் செய்க! -