1
அடிகளார், மனம் திருந்தி விட்டால் மண்ணில் சொர்க்கம்’ ‘பூசைகள் நேராகின் னைத்தும் நேராகும்’ என
J & r
விளக்குகிறார்.
இத்தகைய உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டு விளங்கும் இந்நூலைக் கற்பவர், அடிகளார் அறிவிப்பதைப் போல, அடுத்த தலைமுறைக்கு வெறும் ‘குரு பூசை’ ‘திதிப் பொருளாக மட்டும் போய் விடாமல், மரணத்தை வென்று மரணமிலாப் புகழ் வாழ்க்கையில் வாழ்வார்கள் என்பது உறுதி.
தவத்திரு அடிகளார் அவர்களின் தமிழ்ப்பற்றும்! சமயப் பற்றும் நாடறிந்த ஒன்று. அவர் இதுவரை எண்ணற்ற அரிய நூல்களைப் படைத்துத் தமிழன்னைக்குக் காணிக்கை ஆக்கியுள்ளார். -
200 பக்கங்களை கொண்ட இந்நூல் அளவால் மட்டு மல்ல, எடுத்துக் கொண்ட பொருளாலும்! பெரிய நூல். படிக்கும் அன்பர்களுக்குப் பயன் நல்குவதில் சிறந்த நூல், பிரார்த்தனை, கட்டுரைவடிவில் அமைக்கப் பெற்ற சீரியநூல்.
ஒரே மூச்சில் படித்து முடிக்கும் விதத்தில் நயமும் நடை: அழகும் அமைந்திருக்கும் நல்ல நூல்; வாழ்க்கை முழு வதிற்கும் பயன்படும் ஆழமான நூல். -
நம் அனைவருக்கும் தேவையான நூல்: என்பதைத் தெரிவித்து அடிகளாரின் அருட்பணியினைப் பெரிதும் வாழ்த்துகிறேன்... வணங்குகிறேன். - -
இந்நூலைச் சீரிய முறையில் வெளியிடும் கலைவாணி புத்தகாலய உரிமையாளர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
. . நகர் அன்பன் சென்னை-17 இரரிம வீரப்பர்