பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i43 திருவருட் சிந்தனை

சமுதாயம் தேர் போல் திகழ்ந்திட அருள் செய்க!

இறைவா, தேரூர்ந்த செல்வா! ஏன் தேரூர்ந்து வருகி றாய்! எனக்குக் காட்சி மூலம் படிப்பினைகளைச் சொல்லித் தர நீ தேரூர்ந்து வருகிறாய்! ஆம் இறைவா, இந்தச் சமூகத்தில் நல்வாழ்வு, ஒரு பெரிய தேரைப் போன்றது.

தேர் எளிதில் செய்யப் பெறுவதா? பல தச்சர்கள் கூடிப் பல நாள் உழைப்பால் உருவாக்கப் பெற்றது தேர்! அது போலச் சமுதாய நல்வாழ்க்கையைப் பலரும் கூடிப் பல நாள் முயன்றுதானே நடத்திடுதல் இயலும்.

சமுதாயத்தில் நல் வாழ்வு வ.மு இயலவில்லையே சமு தாய இணக்கமே உருவாக வில்லையே. இல்லை...இல்லை... இறைவா! இன்னமும் சமுதாய அமைப்பே உருவாகவில் லையே! ஏன்?

சமுதாயத்தில் உறுப்பாகிய குடும்பமே, வடிவத்தில்தான், குடும்பமாயிருக்கிறது. உணர்வில், ஒருமையில் சிறந்த குடும்பமே இன்னமும் தோன்றவில்லை; இறைவா இரங்கத் தக்க நிலை. இறைவா, காப்பாற்று. - நான் ஒரு சமுதாயப் பிராணியாகவே வாழ ஆசைப் படு கிறேன்! எனக்கு, சமுதாயத் தினின்று பிரித்துக் காட்டும் தனித்தன்மை மிக்க சிறப்புக்கள், விளம்பரங்கள் எதுவும் வேண்டாம்.

சமுதாய அமைப்பின் பகையாகிய தனிநபர் வழிபாட்டை, வெறுக்கும் மனப்பாங்கை அருள் செய்க! சமுதாயம் தழுவிய அன்பை அருள் செய்க. வேற்றுமைகளைக் கடந்து சமுதாய அமைப்பில் - ஒருமை நிலையில் வாழ அருள் செய்க!

சமுதாயத்தின் சராசரி நிலைக்கு மேலாக எனக்கு எதுவும் வேண்டாமையை விழுமிய செல்வமாக அருள் செய்க! சமுதாயம் தேர் போலானால் நீ எழுத்தருள் செய்வாய் விரைந்து சமுதாயத் தேர் காண அருள் செய்க: