பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 திருவருட் சிந்தனை

இறைவா,பெண்ணின் நல்லாளொடும் வாழும் பெருந் தகையே! திரு ஞானசம்பந்தர் “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்றருளிச் செய்துள்ளார். -

‘மண்ணில் நல்ல வண்ணம் துய்த்தும் களித்தும் மகிழ்ந்தும் வாழ்ந்தால், இன்ப அன்பாகிய கதி வாராமல் போகாது'! என்றருளிச் செய்துள்ளார். - -

இறைவ: , நாள் தோறும் சில மூடர்கள் வாழ்க்கையை மாயை’ என்கின்றனர். சம்சார சாகரம்’ என்கின்றனர். ! நிலையில்லாதது என்கின்றனர்! இறைவா, என் மனம் ம்யங்குகிறது. “* . . . . . - - - - -

மூத்த பிள்ளையாரின் அருமறை வாக்கினை நடை முறைப்படுத்துக என்று ஆணை பிறப்பிக்கிறாய்? இறைவா, நான் மண்ணில் வாழ்வதற்காகவே பிறந்தேன். என்னைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தும் துய்ப்பதற்குரிய பொருள்கள். - *

பொருள்களைத் துய்ப்பதிலேயே வாழ்க்கை வளர்கிறது. ஆதலால், இறைவா, கொடிய விரதங்கள் என்க்கு வேண் டாம். ஆனால் மீனம் விகள் ரப்படாம்ல் துய்த்துப் பழகுதல் வேண்டும். இஃது ஒரு கலை.

துய்ப்பது துய்ப்பதற்காகவே நிகழ்தல் வேண்டும். துய்ப்பது தேவை. துய்ப்பது ஆசையாக வளர்ந்து விடக் கூடாது. இறைவா, துய்ப்பனத் துய்க்க அருள் செய்க. மண் ணில் நல்ல வண்ணம் வாழ அருள் செய்க.

இம் மண்ணையும் விண்ணகமாக்கும் அருள் நலஞ் சார்ந்த உழைப்பினைத் தந்தருள் செய்க! துய்க்கும் பொருள் களின் தலம் கெடாமல் பாதுகாத்துத் துய்க்கும் பாங்கினைக் கற்றுத் தா: * < ... * : , ..

இறைவா, துய்ப்பில் பூரணத்துவம் அடையும் அமர வாழ்வை வழங்கி அருள் செய்க!