பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 திருவருட் சிந்தனை

நல்ல தமிழில் வழிபாடு செய்கிறோம்! எழுந்தருள்க!

இறைவா, புலித்தோல் உடுத்திய முதல்வா! உண்மை யைச் சொல்! சமஸ்கிருதம், தமிழ்-இவ்விரண்டு மொழிகளில் எந்த மொழியைக் கேட்பதில் உனக்கு விருப்பம் அதிகம்?

இறைவா, நாடறிந்த ஓர் உண்மைக்குக் கேள்வியா என்று கேட்கிறாய்? ஆம், இறைவா! இன்று சிலச் சமஸ் கிருதம்தான் உனக்குரிய மொழி, தமிழ் அல்ல என்று கூறு கிறார்கள் வழக்காடுகிறார்கள். நீ உன் விருப்பத்தைச் சொல்லி வழக்கைத் தீர்த்து வைக்கக் .-?

நீ அன்று படிக்காசு கொடுத்துப் பைந்தமிழைக் கேட் டாய், பண் சுமந்த பாடல்களைப் பரிசாகப் பெறுவதற்கு வைகை ஆற்றங்கரையில் மண் சுமந்தாய். சுந்தரரின் செந் தமிழுக்காகத் திருவாரூர்த் தெருவில் நடந்தாய்.

தமிழ் மந்திரத்தை எழுதி நெருப்பிலிட்ட ஏடு எரியவில்லை வெள்ளத்தை எதிர் கொண்டு கரை ஏறியது ஆம், இறைவா! தமிழ் நீ விரும்பும் மொழி இல்லை, இல்லை! தமிழே நீ; நீயே தமிழ்! என்ன இறைவா கூறுகிறாய்?

திருக்கோயில்களில் தமிழை அகற்றி, சமஸ்கிருதத்தை நுழைத்ததால்தான், தமிழிருக்கும் இடம் தேடிப் போய் விட்டாயா? அதனால்தான் உன்னைத் திருக்கோயிலில் தேடிப்பார்த்துவிட்டு, கடவுள் இல்லை’ என்று கூறு கிறார்களா? * 3, “

இறைவா, எங்கள் தவறை :6 அருள்க! Tiar நல்ல தமிழில் வழிபாடு செய்கிறோம். இறைவா. திருத். கோயிலுக்கு வா எழுந்தருளி வாழ்த்துக! - -  !