பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திருவருட் சிந்தனை

சமுதாய விதிக்கேற்ப நான் நடந்திட அருள்க!

இறைவா! நீதியே! நியதியே! நின்னருள் போற்றி: போற்றி! இறைவா, இந்த உலகின் இயக்கத்தில் எண்ணற்ற நியதிகள் உள்ளன. நியதிகளே உலக இயக்கத்தை நடத்து கின்றன.

இந்த உலக இயக்கம் நியதிகளின் வழி நடப்பது. இறைவா, என் வாழ்க்கை விதியின் வழி நடப்பது, நடக்க வேண்டியது விதி என்றால் என்ன இற்ைவ.? ‘தல்ல விதி’ என்று கூறுகிறார்களே, அந்த விதிப்ா? இறைவா, என்னை மன்னித்து விடுக. நான் தலைவிதியில் நம்பிக்கை

இல்லாதவன்.

இறைவா, விதி நியதியைப் போன்றது; விதி என்பது வகுத்துக் கொண்ட வழிமுறை. என் வாழ்க்கையின் விதி (சிறை, இந்த உலகத்தை இயக்கும் இயற்கையின் விதிமுறை களுடன் இசைந்து நடக்க வேண்டும். இயற்கையோ டிசைந்த வாழ்க்கையே வாழ்க்கை. இயற்கையே டிசைந்த வாழ்க் கையே இன்ப வாழ்க்கை.

இறைவா, நான் தனிமனிதன். ஆனால் ஒரு சமுதாயத் தில் ஒர் உறுப்பினனாக வாழ்கின்றேன். ஆதலால் என் னோடு வாழும் மற்றவர்களின் நலமே என் நலம். ஆதலால் அவர்கள் மகிழ்வதற்குரிய விதிமுறைகளே என் வாழ்க்கை வின் விதிமுறை.

இறைவா சமுதாய வாழ்நிலையே என் விதி, என் வாழ் நிலை. ஒரு விதி இன்பத்திற்கு முரணாக இருந்தால், அந்த விதியைச் சமுதாய விதிய்ாக மாற்ற வேண்டும். இதுவ்ே, என் JFS விதி. விதித்துள்ள கடம்ை, இறைவா

இறைவா, நாடு உவப்ப நடக்கும் விதி முற்ைகள் ஆர்ந்தவை. உய்திதருபவை. அந்த உயர்ந்த் விதிமுறை வின் வழி என் வாழ்வியல் நிகழ அருள் செய்க: r