பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளச் 181

புகழ் விரும்பும் இச்சையைத் தவிர்த்தருள்க!

இறைவா, என் நெஞ்சத்தில் துணையாய் அமர்ந்து துறப்பிக்கும் தூய தலைவா! இறைவா, துறக்க வேண்டும், மண், பெண், பொன், புகழ் ஆகியவற்றைத் துறக்க வேண்டும் என்று சான்றோர் கூறியுள்ளனர்.

இறைவா, ஆனால் இன்றைய துறவு நிலை? மண்ணைத் துறக்கவில்லை! பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்குத் துறவி சொந்தக்காரர்! பொன்! - சொல்லவே வேண்டாம்! பொன்னணிகளையே அணிந்து கொள்கின்றனர்; இறைவா! பெண் துறக்கப்பட்டிருக்கிறாள்! பெண் வழித் துறவுகூட அச்சத்தின் வழிப்பட்டதே!

இறைவா’ புகழ் எந்த ஒரு துறவியினாலும் இது துறக்கப்பட்டிருப்பதாகத் .ெ த ரிய வி ல் ைல! இன்றைய துறவிவிகள் புகழுக்கு ஏங்கிக் கிடக்கிறார்கள்! இன்றைய துறவிகளிடம் பக்தர்களைவிட பத்திரிகைக்காரர்களுக்கே செல்வாக்கு அதிகம்!

இறைவா, புகழ் எதற்காக? அதுவும் வாழ்நாளில் சொல்லப் பெறுவது புகழா? இல்லை! இல்லை! வாழ்நாளில் சொல்லப்பெறுவது முகமன். முகம் நோக்கி அச்சத்தின் காரணமாகவோ தையோ ஒன்றை இச்சித்தோ சொல்லப் பெறுவது முகமன்! இது புகழன்று:

இறைவா, நான் முகமன் கேட்கும் விருப்பம் இல்லா திருக்க அருள் செய்க: புகழ் விரும்பும் இச்சைத் தவிர்த் தருள்க! எனக்குப் புகழ் வேண்டாம். நான் உழைக்கக் கடமைப்பட்டவன்!

வேலை செய்வது எனது பிறப்புரிமை! ஒப்புரவு செய்தல் எனது சமுதாயக் கடமை! இவற்றை நான் செய்து வாழ அருள் செய்க: இறைவா, புகழ் எல்லாம் உனக்கேயாகட்டும்! இறைவா, புகழ் விழையா மனம் அருள்க.