பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 . திருவருட்சிந்தனை

எந்நாளும் பணி செய்து கிடக்க அருன்செங்க”

இறைவா! இருளும் ஒளியும் ஒரிடத்தில் கண்ணுக்குத் தெரியும் வகையில் இருக்காது. இருத்தல் இயலாது இறைவா! நான்’ இருக்கும் வரை நீ இருத்தல் இயலாது. . ‘'நான்’ என்பது பொதுமையுள் அடங்க வேண்டும். அல்லது அற்றுப் போக வேண்டும். .

‘நான்’ எளிதில் அடங்காது, அதுவும் இந்த யுகத்தில் அடங்காது. இறைவா! இது ஜனநாயகயுகம்! மக்களாட்சி முறையில், அதிகாரத்திற்கு இடம் இல்லை. தொண்டு உண்டு, பணி இருக்கும்; ஆயினும் இந்த நாட்டு நிலை

இந்நாட்டில் அடங்காக அதிகாரப் பசி, இந்தப் பசி யையும் எடுத்து விழுங்கும் விளம்பரப் பசி! ஆம், இறைவா, காரியம் நடக்கிறதோ இல்லையோ? பத்திரிகைச் செய்திபாராட்டுக் கூட்டங்கள் ஆகியன இன்றைய சமுதாயத்திற்கு

வெளிச்சம் போல்வன:

இந்த யுகத்தில் ‘நான் எப்படி அடங்கும்? நான் என்னும் அகங்காரம் நீங்க வேண்டும். அந்த இடத்தில் நின் அருளாட்சி நடக்க வேண்டும். இறைவா, திருவுள்ளம் பற்றுக! - • . . . . . - - .

தான் இருப்பது தெரியாமல்ே வாழ்தல் வேண்டும். . என் தலை வெளியே தெரியக் கூடாது. மண்ணிற்குள் வேர்

போல இருக்க வேண்டும். இறைவா அருள் செய்க பணி செய்து கிடக்க அருள் செய்க: நாளும் நினக்குப் பணி

செய்து கிடப்பதே என் பணியாக அருள்க!