பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1 97

இறைவா! உன்னைக்காணும் வழியை உணர்த்துக!

இறைவா! மெய்ப்பொருள் காண்பதறிவு’’ என்பது திருக்குறள். அதாவது உண்மையைத் தேடுதல் அறிவு: இறைவா! எது உண்மை, எது உள்பொருள், எது என்றும் உள்ள பொருள் என்று எப்படி தேடுவது?

எந்தப் பொருளால் நிலையான பயன் கிடைக்குமோ அது உள்பொருள்; உண்மைப் பொருள்! இறைவா, நீயே உண்மை! நீயே, மெய்ப்பொருள்! -

ஆனால் உன்னைத் தேடும் ஆர்வம் இல்லையே? ஒரேன்

வழி தேடினாலும் நீ இருக்கும் இடத்தில் நான் தேடுவதில்லை. -

இறைவா! நீ எங்கிருக்கிறாய்? இறைவா! நீ எங்கும் இருக்கிறாய்! சில இடங்களில் விளங்கித் தோன்றுகிறாய்! இறைவா! எல்லா உயிர்களிடத்திலும் நீ விளங்கித். தோன்றுகிறாய்!

இறைவா, உலக உயிர்களை நேசித்து அன்பு காட்டி னால் உன்னைக் கண்டு கொள்ளலாம். இதுவே உண்மை! முதலில் உன்னைத் தேடும்வழி சரியாக இருத்தல் வேண்டும்: நீ வேறு, நான் வேறு! நானே நீ என்றாகி விட்டால் தேடும் முனைப்புத் தோன்றாது. -

இறைவா, நீ என் உள்ளும் இருக்கிறாய்! உன்னை’ நான் காண வேண்டும். உன்னைக் காண்பதற்குரிக’ ஒரே வழி உயிரிரக்கம் காட்டுவதேயாகும்.

மனத்தால்-மொழியால் - உடம்பால் மற்ற உயி: களுக்கு நன்மை செய்து வாழ்வதே - உண்மையைத்; தேடுவதற்கு- உன்னைத் தேடுவதற்குரிய ஒரே வழி: இறைவா உன்னைக் கண்டு மகிழும் வழியை அருள்க!