பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

தவத்திரு குன்றக்குடி அடிகளார் :


குறிக்கோள் நிறைவேற, நீயும் துணை செய்க:

இறைவா, எந்தை ஈசனே. இன்று நான் பிறந்த நாள்.

உண்டு, உடுத்து வாழ்ந்திருக்கிறேன். வேறு என்ன செய்

தேன்! யாதொன்றும் உருப்படியாகச் செய்யவில்லை.

இறைவா, அறுபத்துமூன்று நாயன்மார்களும் குறிக்

கோளில் ஒன்றியிருந்தார்கள், உறுதியாக இருந்தார்கள்.

தங்கள் குறிக்கே ஆளுக்காகத் தங்களையே அர்ப்பணித்துக்

கொண்டார்கள்.

இறைவா, எனக்கு ஏது குறிக்கோள்? சில எண்ணங் கள் உண்டு, இவைகளைக் குறிக்கோளாக ஏற்றுக்கொண் டேனில்லை. ஆதலால், இங்கொன்றும், அங்கொன்றுமாக காரியங்கள் நடக்கின்றன. அவை ஆர்ப்பணிப்பு உனக்

விலும் நிகழவில்லை. செய்ய வேண்டுமே என்பதற்காகச்

செய்கின்றேன். அதனால் எனது எண்ணங்கள் குறிக்கோள்

களாக மாறவில்லை.

என்னிடம் குறிக்கோள்களுக்குரிய உறுதியான செயற் பாடும் இல்லை. ஆதலால் வாழ்க்கை பயனற்றுப்

போயிற்று. என்னை மன்னித்துவிடு. இனிமேல் காரியங்

கள் செய்கின்றேன். இது வழக்கம்போல் தரும் உறுதி

புன்று. முன்பு, எனக்கு என் எல்லை

தெரியவில்லை.

இப்போது எனது ாைழும் எல்லை தெரிகிறது:

ஆதலால் செயல்களில் அழுத்தம் பிறந்திருக்கிறது. எதை யும் விழிப்புணர்வுடன் அணுகுகின்றேன், செய்கின்றேன்.

திட்டமிடும் குறிக்கோளை நிச்சயமாக அடைவேன்.

ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள், நீயும் துணை செய்ய வேண்டும். கடமைகளின் முனைப்பில் நின்ன்ை மறந்தாலும் நீ என்னை மறக்கக் கூடாது. இத்ைவா,

அருள் செய்க!