பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 85

என் எல்லைக்குள் தகுதி மிகுதிபெற அருள்க!

எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி! இறைவா, நீ எல்லை கடந்தவன். காலத்தைக் கடந்தவன். ஆயினும் ஒழுங்கமைவை-விதிகளைக் கடந்தவன் அல்லன்.

நான் செய்யும் வழிபாட்டினால் நான் பக்குவம் அடைகின்றேன். அவ்வழி தகுதி பெறுகின்றேன். நீயும் ஆட்கொண்டருள்கின்றாய். வழிபாடு என்பது ஆன் மாவிற்கு வளர்ச்சியை முதிர்ச்சியைத் தரும் சாதனமாகும். ஆன்ம முதிர்ச்சியே இறைவன் திருவருளைக் கூட்டு விக்கும். இறைவா, இந்த வளர்ச்சிப் போக்குகள் வாழ்க்கையில் அமையவில்லையே. வாழும் மனித குலத்திற்கு விருப்பம் உள்ள ஒர் உயிராக் நான் வளர. வேண்டுமே.

நான் இங்கே புகை மூட்டத்தில் கிடந்து புழுங்கு கின்றேன். போட்டியின் பெயரால் அழுக்காறுமூட்டையைத் தூக்கிச் சுமக்கின்றேன். எல்லாவற்றிலும் எல்லை கடக் கின்றேன்.

எனக்குள்ள அறிவின் எல்லை என்ன்-என்றறியாமல் சிறந்த விஞ்ஞானிகளின் எல்லையை நான் ஆக்கிரமித்து விஞ்ஞானம் மனித சமூகத்திற்கு அழிவைத்தந்தது என்று பழி சுமத்தி, பழைய மெளடிகத்தனத்தை நான் பரப்புவதா? நான் யார்?

உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடும் இயல்புடைழி நான், உழைப்பாளர் உலகாகிய பொதுமையின் மீது பய சுமத்துவதா? என் எல்லை சமயம், சமுதாயம். இந்த எல்லைகளைக் கடந்து அரசியல் வாதியின் எல்லைக்குள் நுழைந்து அரசியல்வாதியை விமர்சனம் செய்வதா?

இறைவா, நான் என் எல்லையைக் கடத்தல் பிழை என்பதை உணர்கிறேன்! என்னைத் திருத்து. நான் என் எல்லையில் சிறப்புறச் செய்யும் ஆற்றலை அருள் செய்க! இறைவா, என் எல்லையினுள் தகுதி மிகுதியுடையோனாக வாழ்ந்திட அருள் செய்க!