பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளசர் 49

இறைவா மரணமிலாப் பெருவாழ்வு அருள்க!

இறைவா, காலனைக் காலால் தடிந்த கால காலனே. மனிதகுலத்தை, மரணபயம் வருத்துகிறது ஏன்?

மரணத்தை நிரந்தரமாகவே உயிர்களுக்கு நீக்கி அருள் செய்யக்கூடாதா? காலனுக்கு வேறு ஏதாவது பணி தரக் கூடாதா?

மரணபயத்தைக்காட்டியே இந்த உலகத்தை இயக்கு தல் நின் கருணைக்கு அழகா?.நீ மட்டும், சாகாமல் இருக்கி றாய்! எங்களுக்கு ஏன் சாவு? இறைவா, என்ன சொல் கிறாய்? .

நானும் மரணமிலாப் இாருவாழ்வு வழலாமா? அப் படியா இறைவா! நான் மரணமிலாப் பெருவாழ்வையே விரும்புகின்றேன். - -

மரணமிலாப் பெருவாழ்வை அடையும் நெறிகளை எனக்குக் கற்றுத் தா. எத்துணையும் பேத முறாது எவ்வுயிரி டத்தும் ஒத்து உரிமை பாராட்டி வாழும் இயல்பினை அருளிச் செய்க!

ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்யும் பெருவாழ் வினை அருள் செய்க: இன்ப துன்பங்களில் சமநிலையில் நிற்கும் பெற்றியினை அருள் செய்க:

எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் என் உடல் உணர்வுகள் சமநிலையில் அமைதி தழுவியதாக விளங்க அருள் செய்க! -

எந்தச் சூழ்நிலையிலும் என் உடலில் குருதி கொதிநிலை அடையா வண்ணம் அருள் செய்க. இவையனைத்தும் பயக்கும் மரணமிலாப் பெருவாழ்வை வழங்கி அருள்க:

தி-4