பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5:2 திருவருட் சிந்தனை

நான் நல்ல தமிழில் உனைப்போற்றி வழிபட அருள்க!

இறைவா, மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவா! நீ தமிழை ஆய்வு செய்தாய்! தமிழை வளர்க்கும் பணியில் உன் துடும்பம் முழுதும் ஈடுபட்டது: சங்கத்தில் தமிழ்ப் புலவ rைாகக் கவியரங்கேறின. ய்.

பண் சுமந்த பாடற் பரிசு பெறக் கூலியா ளாக மண் சுமந்தாய். காசு நித்தம் நல்கி இச்சை மீதுார நாளும் நற்றமிழ் கேட்டாய். ஏன் இறைவா? இவ்வளவு தெரிந்தும் உன்ளோடு பேச சமஸ்கிருதம் வேண்டுமாம்! இது என்ன தியாயம்?

இறைவா, நீ முன்பெல்லாம் எளிவந்தருளித் திரு விளையாடல்கள் ஆற்றினை! நல்ல தமிழ் கேட்கலாம் என் றால் நீ விரும்பி முன் நின்றனை. இப்போதொல்லாம் உன்னை எத்தனை தடவை அழைத்தாலும் நீ வருவதில்லை. ஏன்? நீ மகிழ்ந்து பூரிக்கும் தமிழ் கேட்கும் வாய்ப்பினை

இழத்தமை:ால் நீ வருவதில்லையா?

எந்த இடத்தில் எந்த உருவத்தில் நீ எழுந்தருளி ஆரு பிர்களுக்கு அருள் வழங்கினையோ, அங்குக்கூட நீ இருக் கிறாயோ, இல்லையோ என்ற ஐயம் எழும் அளவுக்கு நீ மெளனம் சாதிப்பது 6T63r?

இறைவா, நான் ஏழை தமிழை மட்டுமே அறிந்த ஏழைப்ப வலன்: வடமொழி தொரியாது. எனக்கு மேட்டுக் குடியோடும் உறவில்லை. எனக்காக யாரும் பரிந்துரை செய்ய மாட்டார்கள்.

இறைவா, நான் கூறும் தமிழ் என். தமிழல்ல. அப்ப ரடிகள் அருளிய அருந்தமிழ்: நா னும் நல்ல தமிழில் உன்னைப்போற்றி வழிபட அருள்செய்க ஊன் கலந்து உயிர் கலந்து நின்னருளில் திளைத்து வழிபடும் வாய்ப்பினை வழங்குக!