பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 58

என்னை ஏழ்மையிலிருந்து காப்பாற்றுக!

இறைவா, ஏழை பங்காளா! ஏழையேன் முகம் ஏறெடுத்துப் பார்ப்பது யார்? யாரிடம் சென்றாலும் ஏழை’’ என்பதற்குரிய முத்திரையுடன்தான் வரவேற்பு.

கல்விக் கோயில் முதல் கடவுட் கோயில் வரை காசு களின் கொட்டம், பணத்தின் ஆட்சி. நான் என்ன செய்ய?

இறைவா, நீ என் வாழ்க்கையில் பங்கேற்க முன் வந்திருக்கிறாய். உண்மையில் என்னை உயர்த்துவது உன் திருவுள்ளமா? அல்லது என்னை உயர்த்துவது போல நடித்து நீ உயரப் போகிறாயா?

இறைவா, என் ஏழைப் புத்தி அப்படிக் கேட்கச் சொல்கிறது! நீ இயல் பாகவே உயர்வற உயர்ந்தவன். என்னையும் ஏற்று.

என்னை, உயர் நிலைக்கு உயர்த்துக! கற்ற அறிஞனாக

அவையில் நிறுத்தி உயர்த்துக, நூலறிவும் நுண்ணறிவும் வழங்கி வாழ்க்கையில் உயர்த்துக!

அறிவறிந்த ஆள்வி னையில் ஈடுபடுத்தி இணையற்ற வாழ் நிலையில் வாழ்ந்திடச் செய்க! சால்பு நெறியில் நிற்கும் சான்றோனாக்கி அருள் செய்க!

பண்பாட்டின் தலைப்பிரியா நெறியில் உயர்த்திடுக. நயத்தக்க நாகரிகத்தில் நிலை நிற்க அருள் செய்க. என்னை ஏழைமையிலிருந்து காப்பாற்றுக.

நான் அறிவுச் செல்வத்தில் வளர்ந்திடத் திருவுள்ளம் பற்றுக. சிந்தையின் நிறைவில் நின்று மகிழ்ந்திடும் பெருவாழ்வினை அருள் செய்க: நின்னருள் பெற்று நின்று உயர்ந்துவ மு.அருள் பாலித்திடுக!