பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருவருட் சிந்தனை

வாழ்க்கை ஊக்கம் நிறைந்த உழைப்பாக அருள்க!

இறைவா, வான நாடனே! வழித்துணை - மருந்தே! நான் உலகில் மேற்கொள்ளும் பயணத்திற்கு உரிய வழியை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

எந்த வழி சுருக்கமானது? பயணத்திற்கு எளிதானது? நலமானது? பயமற்றது? என்றெல்லாம் தெரிந்து கொண்டு தான் பயணம் செய்கின்றேன். - -

செல்ல வேண்டிய ஊருக்குரிய பாதையை விட்டு விட்டு, வேறு பாதையை தான்தேர்ந்தெடுத்ததே இல்லை. ஐயப் பாட்டால் வழியில் பேசவோரிடம்-தெரிந்த ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுதான் பயணம் தொடர்கிறது. இது ஒரு பிறப்பில் சில ஆண்டுகள் நடக்கும் பயணத்திற்கு.

இறைவt, ஊழிக்காலத் தொட்டு, உயிர்க்குலம் தோன்றிய நாள் முதலாகத் தொடர்ந்து என் பயணம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. நெடிய பான்தயில் அல்ல, வட்ட வடிவில் அமைந்த வளைவுப் பாதையில் நடந்து கொண்டிருக்கிறேன். - - --

நான் பயணம் செய்து சென்று (**! வேண்டிய ஊர் இன்ப ஊர். ஆனால், வளைந்த பாதையில் சென்று பயணத்தைத் தொடங்கிய கருவூருக்கே திரும்ப வந்து விடு கின்றேன்! இறைவா, இது என்ன கொடுமை: -

அலைந்து எய்த்துப் போய் விட்டேன்! என்னைச் சரியான வழியில் நடத்துக அழைத்துச் செல்க்:

இறைவா நான் வரும் வழி சரியானதாக | விட்டால் போதும் மற்றெல்லம்.தாமே நடக்கும். நன்றாக நடக்கும். இறைவா, அருள் செய்க: