பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 7

இறைவா. மெய்யன்பு காட்டும் திறன் அருள்க!

இறைவா, மெய்ப் பொருளே! நின்னருள் போற்றி! போற்றி!! இறைவா, பொய்யை நிக்க முயற்சி செய் கின்றேன், முடியவே இல்லை, பொய்!- ஆம், இறைவாக என் வாழ்க்கையே ஒரு பொய்தானே!

அன்பு செய்வேன். இல்லை அன்பு செய்வதாகக் காட்டிக் கொள்வேன். வேலை செய்வேன். இல்லைவேலை செய்வது போல ஒரு தோற்றத்தை உருவாக்கு G?jsif , -

இறைவா, பொய்ம்மையில் பிறந்து உழலும் நான் பொய் பை நீக்க வேண்டும், எப் பணிக்கும் முதற்பணி பொய்யை நீக்குதல். அடுத்து அன்பு கட்ட வேண்டும். ஆம், இறைவா! மெய்யன்பு கட்ட வேண்டும்.

அன்பில் பொய்யன்பு, மெய்யன்பு என்ற வேற்றுமை உண்டு. பொய்யன்பு என்பது பயன் கருதிச் செய்யும் அன்பு. இது அன்பன்று! வணிகமாகும். ஆம் இறைவா, துர்ண்டிலில் புழுவைக் காட்டி மீன் பிடிப்பது போல

இறைவா, பயன் கருதிச் ச்ெய்யும் அன்பு, அன்பன் து: எண்ணிய் பயன் கிடைக்காது போனால் அன்பு பகையாக மாறிவிடும்.

இறைவா, கனவிலும் நான் பொய்யன்பு செய்யக் கூடாது. நான் என் உள்ளத்தில் ெெய்யன்பை வருந்தி: அழைத்துக்கொள்ளவே விரும்புகின்றேன்.

நான் வாழ்தல் வேண்டும். அதற்கு ஒரே வழி அன்பு செய்தல், அதுவும் மெய்யன்பு காட்டுதல். “. . . . .” இனி நான் மெய்யன்பு காட்டுவேன்! மெய்யூன்பு காட்டும் திறன்ை அருள் செய்க! மெய்யே உன் பொன், டிைகள் கண்டு இன்று வந்து அடைந்தேன். இறைவா, மெய்யன்,காட்டும் திறனை அருள் செய்க! -