பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 33

இறைவா, ஞானமே தின்திகுவடிகள் போற்றி!

இறைவா, என் ஆன்மாவை விழித்தெழும்படி செய்து அருள்க! சுயநலச் சிந்தனையில்லாத தனிப்பெரும் வாழ்வினை அருள் செய்க! பிறருக்கு நலம் புரிவதில் உறுதியினைத் தந்தருள் செய்க.

இறைவா, என் பணிக்கு முதல் தேவை மனிதர்: இரண்டாவது தேவை பணம்! என் நாடு விடுதலை பெற்று ஆண்டுகள் பல ஆகிவிட்டன! ஆனால் நாட்டுமக்கள் இன்னமும் விழிப்படைய வில்லை. -

மக்கள் பரம ஏழைகள், அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று கல்வியை, ஞானத்தை, வாழுங்கலையைக் கற்றுத் தரவேண்டும். இது என் ஆசை! இதனை முழுதாக முடித்தால் இந்தியாவின் ஆன்மா விழித்தெழும். அடுத்த நொடியிலேயே ஆவேசம்கொள்ளும். இந்தியாவைப் பற்றியுள்ள வறுமை அகலும், இழிவு நீங்கும்.

இறைவா, இந்த நற்பணியைச் செய்யும் உறுதியைத் தந்தருள் செய்க. பல தடவை முயன்றாயிற்று மக்கள் வந்தபாடில்லை! இறைவா, உன் அடிச் சுவட்டில் நான் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றாக வேண்டும். அவர்களின் நிலையை உயர்த்தியர் க வேண்டும். இதுவே, என் பணி! இறைவா, இந்த நாட்டில் இது ஐயம்!

இந்த நாட்டில் கல்வி முதல் கடவுள் வரை பணமே ஆட்சி செய்கிறது. பணம் மட்டுமே ஆட்சி செய்யும் இந்த உலகத்தில் இது சாத்தியமில்லை! -

இறைவா, எனக்குரிய மனிதரைத்தேடி நான் கண்டிட அருள் செய்க! எனக்குப் பணம் தருவாரையும் காணோம்: நானே என் செலவுக்குரிய பணத்தையும் தேடிட அருள்க! இந்த நாட்டின் ஏழை பாமர மக்களை உயர்த்தும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட அருள் செய்க!