பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அகவுணர்வுகளாலும், திருக்கைலாய பரம்பரைத் திருவண். ணாமலை ஆதீனம் ஐந்து கோவில் ரீலரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் என மரபு பேணும் மாண்புரைகளாலும், நீள நினைந்தும் நித்தலும் கை தொழுதும் போற்றப் பெறுபவர் அடிகளார்.

வள்ளுவரே இவர், சேக்கிழாரே இவர், அப்பரடிகள்ே இவர் என்றெல்லாம் நினைக்கப் பெறும் அடிகளார், உண்மையிலேயே இவர் யார் என்ற வினாவிற்குத் திருவருட் சிந்தனை அடிகளாரை இவர் இன்னார் இல்லை, இனியார்!. இவரைப் போல இனியார்? என்ற வகையில் நம்மிடம் அகப்பட வைத்து விடுகிறது. -

திருவாசகப் பெரும் பேரின் பத்தைத் 5.. தேக்கித் தேக்கித் திகழும் அருள் நிறை நெஞ்சம் போற்றிப் புணர்ந்திருந்து பொய். கெட்டு மெய்யானார் என்ற மணி வாசகத்தின் அருளனுபவத் திரு நிகழ் நெஞ்சம் உலக மக்களுக்கு வழங்கும் வாழ்வியல் வழிகாட்டியே இந்நூல்.

இறையருட் சிந்தனைக் களஞ்சியமாகிய திருவருட் சித்தனை மக்கள் வாழ்வில் எந்நாளும் நின்று, பணி செய்வ தாகுக

அதனை அவ்வாறே பணி கொண்டும், மக்களைப் பனிகொள்ள வைத்தும் புரட்சி செய்யும் திருக்குறள் தேறித் தோன்றல் பாநயப் பாமணி கலைவாணி: திரு சீனி. திருநாவுக்கரசு அவர்களின் தொண்டு வாழ்ந்து வளம் சிறப்பதாகும்.

சென்னை வை. இரத்தினசபாப்தி,