பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருவருட் சித்தனை

இறைவா, நான் மற்றவர் வாழ்வாக அமைய அருள்க

இறைவா, அறநெறி அண்ணலே! நான் அறநெறியில் நிற்க ஆசைப்படுகிறேன்! ஆனாலும் இயலவில்லை! இறைவா, நன்றருளிச் செய்தாய்! அறநெறி என்பது தர்மங்கள் செய்வதன்று. அறநெறி என்பது ஒரு வாழ்க்கை - :ofo:

அறநெறியை அடைதல் எளிதன்று. அஃது ஒர் அரு மையான முயற்சி! அறநெறி வாழ்க்கைக்கு, முதலில் தியாக உணர்வு வேண்டும். தியாகம் என்பது என்ன? தனக்குத் தேவையானதெல்லாம் மற்றவர் பெற்று வாழ, தன்வாழ்க்கை தடை யில்லாதவாறு நடந்து கொள்ளுதல்.

வையம் உண்ண உண்ணுதல், வையம் உடுத்த உடுத் தல், மற்றவர் வாழ்க்கைக்குத் தான் இழக்க வேண்டிய திருப்பின் இழக்கவும், துன்புற வேண்டியிருப்பின் துன் புறவும் தயங்காது ஒருப்படுதல் தான் அழிய வேண்டிய நிலை வந்தாலும் ஏற்றுக் கொள்ளுதல்: இதுவே தியாகம்:

இறைவா, தியாகம் என் வாழ்க்கையில் எளிதில் வராது: ஆனால், தியாக உணர்வு பெற்ற ல் வாழமுடியும். நான் தியாகத்தைச் செய்ய பழகிக் கொள்ள வேண்டும். எல்லாரையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சின்னச் சின்னச் செய்திகளிலும் விட்டுக் கொடுக்க வேண்டும். தனியே உண்ணாது கூடி உண்ண வேண்டும். மற்றவர் வேலையில் பங்கேற்க வேண்டும். இறைவா, அருள் செய்க! பழுத்த மரங்களின் தியாகம், என் வாழ் வாகிறது! விளைந்த செந்நெல் கதிர், என் வாழ்வாகிறது: என் தாய் என் வாழ்வானாள்:

நான், மற்றவர் வாழ்வாக அமைய அருள் செய்க: இதுவே தியாகம் ஒடி ஒடி மற்றவர்க்கு உற்றது செய்ய அருள் செய்க: தியா கேசன்! தியாகம் செய்யக் கற்றுத் தா!