பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளச் 31

உழைக்கும் தவத்தினில் நலத்துடன் வாழ அருள்க!

இறைவா, நீ அருமையாக அருள் பாலித்த உடல்ை நலத்தோடு பேண வேண்டும். தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்லவகையில் முழுமையாகப் பயன் படுத்த வேண்டும். உடல் நலம் பேணலும் கடமையே!

இறைவா, நல்ல காற்று சுவாசிக்க வேண்டும், நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும், காய்கனிகளை உண்ண வேண்டும். இண்வ யெல்லாவற்றையும் எனக்கருள் செய்க! உடம்பை இகழ்தல், நோய்க்கு ஆளாக்குதல் உனக்கு விரோதமான செயல்.

உடலைப் ப்ோற்றி வளர்த்தால்தான் உயிர் வளரும்: உயிர் வளர்ந்தால்தான் உணர்வு வளரும் உணர்வில்தான்

ஒழு க்க த் தி ல் தா ன் உயிர் அன்பு தலைப்படும்! ப்பொழுதுதான் நீ என் உடலை இடமாகக் கொண்டு எழுந்தருள்வாய்: * - -

இது என் உடம்பன்று உனது திருக்கோயில். நான் புலர்காலையில் விழுந்தும், கதிரொளியில் தோய்ந்தும், காற்றில் களித்தும் புனலில் குளித்தும் இயற்கையோடிசைந்து வாழ்தல் த்வம்! வாழ்வாங்கு வாழ்தல் அறம்!

இறைவா, நல்ல உடல், உழைப்பை நாடுகிறது, அவாவுகிறது: உழைத்தால் உடம்பு நன்றாக விளங்குகிறது. உடலுக்கு நோய் உழைக்காமையே! _. . . . . . .

இறைவா, உடலின் நலனுக்கு அருள் செய்க. உடல் வருத்த உழைக்கும் தவத்தில் ஆற்றுப்படுத்தி, சுவையான, பயனுள்ள உணவுகளை வழங்குக. நல்ல உறக்கத்தினைத் தந்து நன்றாக வாழ அருள் செய்க! -

-E: