பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 37

தப்பெண்ணம் இல்லாது வாழும் பேற்றினை அருள்க!

இறைவா, என்னை ஆட்கொண்டருள முடியும் கான்ற நம்பிக்கையுடன் என்னைத் தொடரும் தலைவா! Srirsts: நீ எடுத்தாள முடியுமா? இறைவா, நான் தப்பெண்ணங் களின் வழிப்பட்டு, ஐயப்பட்டு உழல்கிறேன். நான் தப் பெண்ணங்களின் கொள்கலம். அதனால், நான் அகந்தை உணர்வுடன் போட்டியிடுகிறேன்.

இறைவா, நான் சொல்வதே சரி: செய்வதே சரி: என்ற முடிவுக்கு ஒத்திசையாதவர்கள் எனக்கு வேண்டாத வர்கள் என்று அவர்கள் மிது தப்பெண்னம் குடிகொண்டு விட்டது. தப்பெண்ணம் உடல் கலத்தைக் கெடுக்

கிறது.

என் உடல்நலம் அறிவு, உணர்வுகளை, எல்லாம்கூட தப்பெண்ணம் கெடுத்து விடுகிறது. நண்பர்களைப் பகை வர்களாக்கிவிடுகிறது. ஏன்? மற்றவர் சொல்வதைக் கேட் பது இல்லை என்ற முடிவில் என் மனம் தாழ்ப்பாள் போட்டுக் கொள்கிறது. .

இறைவா, நீ தப்பெண்ணங்களுக்கு அப்பாற் பட்டவன். நீ பஸ்மாசுரனைக்கூடத் தப்பாக 576irT வில்லை. இறைவா, நானே ஒரு சந்தேகப் பிராணி. தப்பெண்ணங்களே என் முதல். தப்பெண்ணங்களை நான் தற்காப்பு என்று எண்ணுகிறேன். இது தவ து.

இறைவா, நான் நன்றாக எண்ணி நம்பிக்கையோடு நாலுபேருடன் வாழ்ந்தாலே போதும். தான் வெற்றி பெறுவேன். இறைவா, rTh இல்லாது வாழ்த் திடும் பேற்றினை அருள் செய்க! -

தி-7